Pages

Wednesday, August 8, 2012

எங்கள் மூத்திர வாழ்வு




வலிகளை வழக்கமாய் புதைக்க தெரிந்தெமக்கு 
இலகுவாய் இருக்கிறது 
சித்ரவதைகளை எதிர்கொள்ள !

முகத்தில் சிரித்தபடி 
அகத்தில் அழுதபடி 
பிணத்தில் ஒரு நடை பிணமாய்
நடந்த படி போகிறது எம் வாழ்வு !

எந்த துயரிலும் 
கலங்காமல் 
கல்லைப் போல இருக்கிறார்கள் சிலர் !


இடப்பெயர்வு பொதிகளை இறக்கிவைத்து 
காயங்களை எமதோடு 
சேர்த்து,
முட்கம்பிக்குள் முழுமையாய் சரணாகதி அடைந்தபடி ....

எங்கள் வீட்டில் மூத்திரம் போகவே 
அடையாளப் பத்திரம் 
காட்ட வேண்டியதாய் தொடர்கிறது 
எங்கள் மூத்திர வாழ்வு !

ரணத்தின் ரணமாய், 
கணம் கணமாய்,
துடி துடித்து சாகிறது 
அவரவர் மானம் !

துப்பாக்கி கண்களால் 
குரிபார்க்கப்படுகிறது -தமிழ்த் 
தையல்களின் குறிகள் !

இதை சொல்லியழுதாலும் இயலாமையாய் 
போய்விடுமென 
மென்று 
கூட்டி விழுங்கிய படி நான் !


தாகம் தணிக்க 
காலம் பார்த்தபடி 
ஒரு கடிகார முள்ளாய்
நானும் முட்கம்பிக்குள்!


எங்கள் கனவில் 
மீண்டும் பூக்கள்,
முட்கம்பிகளுக்கு இடமில்லை!

செண்பகப் பறவை ஒன்று 
சேதி சொல்கிறது 
எனது கவிதையிலிருந்து
எழுக தோழா !
எழுக,
இல்லையேல் விழுவாய் நாயே
விழுவாய் 
எதிரி காலை நக்கி தொழுவாய்!

No comments:

Post a Comment