Pages

Wednesday, April 25, 2012

முடிச்சுகள்


கல்லடிபட்ட நாயாகவே 
அலறிய படி ஓடிக்கொண்டிருக்கிறது 
மனசு ! 


முடிவுகள் முரணாகுமோவென்ற 
அச்சத்திலேயே 
முடிச்சுகள் அவிழ்க்கபடாமலிருக்கின்றன! 


நள்ளிரவின் அமைதியை 
நண்பகலில் கூட உணரமுடிகிறது, 
சத்தங்கள் அற்று கிடக்கும் 
எனது 
பகல்ப்பொழுதுகள் ! 


எச்சிலினால் வலை பின்னி 
இரை காணும் 
சிலந்தி ! 
எனை பார்த்து சிரிக்கிறது 
நம்பிக்கை இல்லாதவன் என ? 


நான் ஒரு அறையின் மூலையில் 
முடிச்சுகளோடு 
முரண்பட்டபடி ..........

No comments:

Post a Comment