Pages

Wednesday, June 27, 2012

இழந்த மண்


இனிமேல்
நீ
என்னை சுமக்க முடியாது ?

என்னை
சுமந்த 
உன்னையே
காப்பாற்ற முடியாமல்
கடல் கடந்து
காணாமல் போய்விட்டேன் !

நீ
எனக்கென்று
வைத்திருந்த இடங்களில்
என்னை பார்க்கமுடியாது !

உன்னை மீட்கும்
அந்த
புனித
பிறவியாக
நான் வரவில்லை !

அந்த
நாயகர்களின் கருவிகளும்
இப்போது
என்னிடமில்லை !

கவிதைகளாய் கண்ணீர் விட
எழுதுகோலை மட்டும்
கரம் பிடித்துள்ளேன் !

என்னுடைய மகிழ்ச்சி
இறந்து போய்
ஈமக் கிரிகைகளும்
செய்தாகிவிட்டன !

வீதியெங்கும்
மரணவீட்டின் அடையாளமாய்
தோரணங்கள்
அழுத படி தொங்கின !

ஒரு நாழிகை
நின்று
நிமிர்ந்து பார்க்கிறேன் !

ஒவ்வொரு நிமிடங்களும்
நொறுங்கி போகிறது
ஒரு கண்ணாடியாய்
மரண பயத்தில் !


ஒரு இலையுதிர்காலமாய்
வறண்டு போயிருக்கிறாய்
என்னை சுமந்த
அன்னை மண் நீ !

என்
எழுதுகோல்
கவிதை எழுதுகிறது,
இப்போது இலையுதிர் காலம்
தான்
வசந்த காலத்திற்காய் என !

No comments:

Post a Comment